ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி முக்கியச் சாலையில் உள்ள ஐயப்பன் கோயில் வளாகத்தில், சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வாழ்வியல் ஆன்மிகம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெறுகிறது.
நெய்வேலி சைவ திருமுறை பயிற்சி மைய பேராசிரியர் முருகப்பனார் வாழ்வியல் ஆன்மிகம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றுகிறார். நிகழ்ச்சியில், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன், ஓய்வு துணை ஆட்சியர் முருகேசன், ஓய்வு தலைமை ஆசிரியர் முனிரத்தினம், அமைப்பாளர் கேசவன், குமரேசன், சிவா, வைத்தியலிங்கம், சண்முகம், மண்டலப் போக்குவரத்து அலுவலர் குணசேகரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.