கிருஷ்ணகிரி அணையிலிருந்து வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 4,166 கன அடியாக இருந்த உபரி நீர் வெளியேற்றம், மாலையில் வினாடிக்கு 9,098 கன அடியாக இருமடங்காக உயர்ந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, கிருஷ்ணகிரி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணை முழுக் கொள்ளளவான 52 அடியை எட்டியது.