போச்சம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பிரேமா தலைமை வகித்து மாணவியரை பாராட்டினார். பள்ளி மாணவியர் இயற்கை சார்பு, மழைநீர் சேகரிப்பு, ராக்கெட் மாதிரி வடிவமைப்பு, மாற்று மின்சார தயாரிப்பு, மாதிரி விமான வடிவமைப்பு ஆகியவற்றை சிறப்பாக செய்திருந்தனர் (படம்). பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் மாணவியர்களுக்கு ஊக்கமளித்து வழிகாட்டினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கணினி ஆசிரியர் முத்துக்குமார், நவீன்குமார் ஆகியோர் செய்து பரிசுகளை வழங்கினர். இதில் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் செந்தில் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.