ஒசூர் ரயில் நிலையம் எதிரில் இந்து முன்னணியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஒசூரில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் காவிக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒசூர் ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலர் சத்யகோபால் தலைமை தாங்கினார். சேலம் கோட்டச் செயலர் உமேஷ் முன்னிலை வகித்தார். இதில், பா.ஜ.க. மாநில பொதுச் செயலர் கே.எஸ்.நரேந்திரன் கண்டன உரையாற்றினார். மேலும், பா.ஜ.க. மாநில இளைஞரணி செயலர் நாகராஜ், முருகன், சிவா, அப்பண்ணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.