ஒசூர், பாகலூர்
ஒசூர் பாகலூர் மற்றும் பேரிகை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.20) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஒசூர் கோட்டத்தை சேர்ந்த சிப்காட் பேஸ் 2 துணை மின் நிலையம், பாகலூர் மற்றும் நாரிகானபுரம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிப்காட் பகுதி 2 பத்தலபள்ளி, பென்னாமடம், எலக்ட்ரானிக் எஸ்டேட், குமுதேபள்ளி, மோரனபள்ளி, ஏ.சாமனபள்ளி, ஆலூர், புக்கசாகரம், அதியமான் கல்லூரி, கதிரேபள்ளி, மாருதி நகர், பேரண்டபள்ளி, ராமசந்திரம், சுன்டட்டி, அன்கேபள்ளி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதேபோல பாகலூர் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பாகலூர், ஜீமங்கலம், உளியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னபள்ளி, சூடாபுரம், அலசபள்ளி, பி.முதுகானபள்ளி, தேவீரபள்ளி, சத்தியமங்கலம், தும்மனபள்ளி, படுதேபள்ளி, பலவனபள்ளி, முத்தாலி, முதுகுறுக்கி, வானமங்கலம், கொத்தபள்ளி, சேவகானபள்ளி, சிச்சிருகானபள்ளி ஆகிய இடங்களிலும், நாரிகானபுரம் துணை மின்நிலையத்திற்குள்பட்ட நாரிகானபுரம், பேரிகை, அத்திமுகம், செட்டிப்பள்ளி, நரசாபள்ளி, பன்னப்பள்ளி, சீக்கனபள்ளி, நெரிகம், கூல்கெஜலன்தொட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் குமார் தெரிவித்தார்.