ஜூலை 3-இல் சூளகிரி, குருபரப்பள்ளியில் மின் தடை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, காமன்தொட்டி, குருபரப்பள்ளி பகுதிகளில ஜூலை 3-ஆம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழக செயற்பொறியாளர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, காமன்தொட்டி, குருபரப்பள்ளி பகுதிகளில ஜூலை 3-ஆம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழக செயற்பொறியாளர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி கோட்டத்தில் வருகிற ஜூலை 3-ஆம் தேதி குருபரப்பள்ளி, காமன்தொட்டி மற்றும் சூளகிரி ஆகிய பகுதிகளில் உள்ள 110 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, குப்பச்சிப்பாறை, எண்ணேகொள், விநாயகபுரம், கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்ட பெத்தனபள்ளி, ஜிஞ்சுபள்ளி, போளுபள்ளி, கொண்டேபள்ளி, சூளகிரி, உலகம், மாதரசனபள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி, காமன்தொட்டி,
கோனேரிப்பள்ளி, பாத்தகொட்டாய், சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பதிமடுகு, நல்லூர்,
தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிகுப்பம், மற்றும் தம்மாண்டரபள்ளி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com