தளி அருகே 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் புதன்கிழமை பெய்த சூறாவளி காற்றில் சாய்ந்து விழுந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. தளியில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு செல்லும் சாலையில் திப்பேன அக்ரஹாரம் கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் சாய்ந்தது. இதனால் தேன்கனிக்கோட்டையிலிருந்து தளி செல்லும் சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.