பண்ணந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி பா.ஜ.க.வினர் திங்கள்கிழமை ரத்த தானம் செய்து மரக்கன்றுகளை வழங்கி கொண்டாடினர்.
போச்சம்பள்ளியை அடுத்த அரசம்பட்டி அருகேயுள்ள பண்ணந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் மஞ்சுநாதன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், காவேரிப்பட்டணம் வட்டார மருத்துவ அலுவலர் ஹரிராம், காவேரிப்பட்டணம் அரசு மருத்துவர் சோமசுந்தரம், பண்ணந்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கோகுல ப்ரீத்தி, செஞ்சிலுவை சங்க காவேரிப்பட்டணம் கிளை செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்து குத்துவிளக்கேற்றி ரத்ததான முகாமை தொடக்கிவைத்தனர். மாநில இளைஞர் அணி செயலாளர் எம்.நாகராஜ், மாவட்ட இளைஞர் அணித் தலைவர் நீலமேகம், ஒன்றியச் செயலாளர் சுபாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் ஒன்றியத் தலைவர் மகேந்திரகுமார், ஒன்றிய பொதுச் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு, தென்னக்கன்றுகள், மரக்கன்றுகளை வழங்கினர். மேலும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் மஞ்சுநாதன் செய்திருந்தார். பி.கிருஷ்ணன் நன்றி கூறினார்.