"7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை வேண்டும்'

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநர் உடனடியாக நடவடிக்கை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.ம.மு.க. செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறினார். 
ஒசூரில்  அ.ம.மு.க. சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வந்த  சி.ஆர் .சரஸ்வதி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அமமுக  மிகப்பெரிய வெற்றி பெறும். நடிகர் கருணாஸ் தான் பேசியதை  ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  பா.ஜ.க.வோடு இந்த அரசு கூட்டுச்செய்து மோசமான அரசியல் செய்து வருகிறது.
ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய தமிழர்கள் 7 பேர், கடந்த 28 வருடங்கள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.  இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்களை தமிழக ஆளுநர்  உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com