ஒசூர் சூடவாடி தொடக்கப் பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வருவாய் மாவட்ட சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் செ. ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ம. பவுன்துரை வரவேற்றார்.
மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்களின் கருத்துரைகளுக்குப் பின்னர் மத்தூர், ஒசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு கீழ்க்கண்ட பொறுப்பாளர்கள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். மத்தூர் கல்வி மாவட்ட மாவட்டத் தலைவராக சா. ராஜேந்திரன், மாவட்டச் செயலராக செ. ராஜேந்திரன் மாவட்டப் பொருளாளராக த. செல்வம், மாவட்ட மகளிர் அணி நிர்வாகியாக க. தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் இரா. சாந்தா, துணைச் செயலராக பா.ஜியாவுல்லா, தணிக்கைக் குழு நிர்வாகியாக சி. மாதையன் ஆகியோருக்கு மாநிலப் பொருளாளர் க. சந்திரசேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்து பேசினார்.தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டத் தலைவர் தூ. மனுநீதி நன்றி கூறினார்.