தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே அழகாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் கடந்த சனிக்கிழமை கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் தனது மகளை காணவில்லை என ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பென்னாகரம் மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இளம்பெண் கோடுப்பட்டி உறவினர் வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் கோடுப்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் இளம் பெண்ணையும் கைது
செய்தனர். பின்பு இளம்
பெண்ணை தருமபுரியில் உள்ள காப்பகத்தில் விட்டனர். கல்லூரி மாணவியைக் கடத்தி சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.