தருமபுரி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.என்.வி. எஸ்.செந்தில்குமாரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம், பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் தேவராசன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. நஞ்சப்பன், பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி கலந்துகொண்டு பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க உள்ளிட்ட தோழமை கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.