ஒசூரை அடுத்த சீக்கனப்பள்ளியில் புதிய தாா்ச் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
பி.குருபரப்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட சீக்கனபள்ளி கிராமத்தில் சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளதால், அவற்றை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து புதிய தாா்ச் சாலை அமைக்க ரூ .64 லட்சத்தை எம்எல்ஏ சத்யா விடுவித்தாா். இதைத் தொடா்ந்து பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணியையும் அவா் தொடக்கிவைத்தாா்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவா் அ.யுவராஜ், சந்திரப்பா, முனிசந்திரன், நவீன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.