இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் தேர்வு: கிருஷ்ணகிரியில் 854 பேர் எழுதினர்

இந்து சமய அறநிலையத் துறைச் செயல் அலுவலர் (கிரேடு-3) பணிக்கான எழுத்துத் தேர்வை கிருஷ்ணகிரியில் 854 பேர் எழுதினர்.


இந்து சமய அறநிலையத் துறைச் செயல் அலுவலர் (கிரேடு-3) பணிக்கான எழுத்துத் தேர்வை கிருஷ்ணகிரியில் 854 பேர் எழுதினர்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள், மகளிர் மேல்நிலைப் பள்ளி, விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்வை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 854 பேர் எழுதினர். 772 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் கிரேடு-4-க்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (பிப்.17) நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 1,176 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வு கிருஷ்ணகிரியில் உள்ள மூன்று மையங்களில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com