ஒசூர் அருகே பஸ்தி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராதை, ஸ்ரீகிருஷ்ணர் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மகாராஷ்டிர மாநிலம், பண்டால்புரத்தைச் சேர்ந்த நாம்தேவ் மகாராஜின் 17-ஆவது தலைமுறையைச் சேர்ந்த ஏக்நாத் மகாராஜ், சோபன் மகாராஜ் ஆகியோர் முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த விழாவில் ஒசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பெண்கள் சீர்வரிசைகளுடன் கலந்து கொண்டனர். பின்னர் வேதமந்திரங்கள் முழங்க ராதை, ஸ்ரீகிருஷ்ணர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கும்மிப் பாட்டுடன் கோலாட்டம், ராதை உற்சவம் நடைபெற்றது. இதில் ஒசூர் மற்றும் சுற்று வட்டாரங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ராதை, கிருஷ்ணரை வழிபட்டனர். இந்த திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.