கிருஷ்ணகிரியில் ஊர்க்காவல்படை வீரர்கள் தேர்வு: 146 பேர் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊர்க்காவல் படைவீரர்களுக்கான தேர்வில் 146 பேர் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊர்க்காவல் படைவீரர்களுக்கான தேர்வில் 146 பேர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஊர்க்காவல் படைப்  பிரிவில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி, பர்கூர் ஆகிய காவல் உள்கோட்டத்தில் ஆண்கள் 33, பெண்கள் 18 காலிப் பணியிடங்களுக்கான வீரர்கள் தேர்வு, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தத் தேர்வில் 124 ஆண்கள், 22 பெண்கள் என மொத்தம் 146 பேர் பங்கேற்றனர். ஆண்களுக்கு உயரம், மார்பளவு, 1,500 மீ. ஓட்டம், பெண்களுக்கு உயரம், 400 மீ. ஓட்டம் என தேர்வுகள் நடைபெற்றன. மேலும் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன. இந்தத் தேர்வில் 20 பெண்கள் உள்பட 79 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் எம்.புருஷோத்தமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com