பென்னாகரம் அரசு கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்ட தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவிற்கு உதவி கருவூல அலுவலர் மேனகா தலைமை வகித்தார். கூடுதல் சார் கருவூல அலுவலர் ஜெயபிரதீபா முன்னிலை வகித்தார். பென்னாகரம் அரசு ஆண்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் வீரமணி குத்துவிளக்கேற்றி திட்டத்தை தொடக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் அனைத்தும் முற்றிலுமாகக் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் அரசு பெண்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, ஜெயசீலன், எல்லப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.