அஞ்செட்டியில் தீவிபத்து நிகழ்ந்த வீட்டின் உரிமையாளருக்கு திமுக சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.
அஞ்செட்டி ஒன்றியம் குந்துகோட்டை ஊராட்சி குருபரப்பள்ளி கிராமத்தில் வசிப்பவர் தச்சுத் தொழிலாளி மாதேவப்பா. இவரது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மர்ம நபர்கள் வீட்டுக்கு தீவைத்து விட்டு தப்பியோடினர். இந்த விபத்தில் வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களும் எரிந்து சாம்பலாகின.
தகவல் அறிந்த திமுக மாவட்டச் செயலாளரும், தளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஒய். பிரகாஷ்
அவரது வீட்டைப் பார்வையிட்டார். பின்னர், பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 20 ஆயிரம் திமுக சார்பில் நிவாரண நிதியாக
வழங்கப்பட்டது.
உடன் தளி ஒன்றிய செயலாளர்கள் திவாகர், சீனிவாச ரெட்டி, அவைத்தலைவர் நாகராஜ், துணைச் செயலாளர் முனிராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.