பேரிகை அருகே குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
பேரிகை அருகே உள்ள கும்பளம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ( 52). கூலித் தொழிலாளி. இவருக்கு மது பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் திங்கள்கிழமை அங்குள்ள குளத்தின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது தவறி விழுந்தார்.
இதில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து பேரிகை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.