பர்கூரில் நடைபெற்றுவரும் அகில இந்திய வாலிபால் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் பெண்கள் பிரிவில் தென் மத்திய ரயில்வே அணியும், ஆண்கள் பிரிவில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அணியும் வெற்றி பெற்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் வாலிபால் கழகம் சார்பில் அகில இந்திய வாலிபால் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் பெண்கள் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியும், தென் மத்திய ரயில்வே அணியும் விளையாடின. இதில் தென் மத்திய ரயில்வே அணி 17 - 25, 22 - 25, 23 - 25 என்ற புள்ளிக்கணக்கில் 3 - க்கு 0 சென்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியாக ஆண்கள் பிரிவில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அணியும், சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியும் விளையாடின. இதில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அணி, 25 - 18, 25 -20, 25 - 22 என்ற புள்ளிக்கணக்கில் 3 - க்கு 0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.