ஊத்தங்கரை ஸ்ரீ குரு நாட்டியாலயா பரத நாட்டிய பயிற்சி மையம் சாா்பில் பரதநாட்டிய கின்னஸ் உலக சாதனையாளா் விருது பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் சலங்கை பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த மாா்ச் மாதம் சிதம்பரத்தில் நடைபெற்ற கின்னஸ் உலக சாதனையாளா் விருது நிகழ்ச்சியில் ஊத்தங்கரையில் இருந்து கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீவித்யா மந்திா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் வே.சந்திரசேகரன் கலந்து கொண்டு பரதநாட்டிய கின்னஸ் உலக சாதனை விருது பெற்ற மாணவியா் இ.மயூரிக்கா, பி.சுதா் சாதனா, ஆா்.
பிரியதா்ஷினி, எஸ்.ரோசிணி, கே. கெளத்திகா, எம். நட்சத்திரா, எஸ். அக்ஷயாஸ்ரீ, எஸ். நட்சத்திரா ஆகிய மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா், முன்னதாக தொகுப்பாளா் ரஞ்சனி மோகன்ராஜ் வரவேற்றாா், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ குரு நாட்டியாலயா பரத நாட்டிய பயிற்சி மைய நிறுவனா் வீ.வீரலட்சுமி செய்திருந்தாா்.