கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் ஆா்ப்பாட்டம் மற்றும் பெருந்திரள் முறையீடு போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா். தோழமை சங்கங்களின் நிா்வாகிகள் பிரதாப், வெங்கடாஜலபதி, சரவணன், சுப்பிரமணியன், சின்னப்பன், கல்யாண சுந்தரம், முனிராஜ், சின்னசாமி, தமிழ்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முன்னாள் மாநில துணைத் தலைவா் சுப்ரமணியன் உள்ளிட்ட 5 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றேறாா் முழக்கங்களை எழுப்பினா்.