வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நிறைவு

ஒசூரில் வாக்குப் பதவி இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும்  பணி திங்கள்கிழமை நிறைவுபெற்றது.

ஒசூரில் வாக்குப் பதவி இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும்  பணி திங்கள்கிழமை நிறைவுபெற்றது.
இந்தப் பணிகளை மத்திய பொதுப் பார்வையாளர் கல்யாண் சந்த் ஷமன் ஆய்வு நடத்தி  நிறைவு செய்தார்.  தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு சில நாள்களே உள்ளதால் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. 
வாக்குப் பதிவு இயந்திரத்தில் முதலிடத்தில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஏ.சத்யாவின் பெயர் சின்னம் இடம் பெற்றுள்ளது.   இரண்டாமிடத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜோதி,  மூன்றாமிடத்தில்  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ராஜசேகர், நான்காமிடத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஜெயபால்,  8-ஆவது இடத்தில் அ.ம.மு.க. வேட்பாளர் புகழேந்தி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com