ஒசூா் அருகே பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்த வழக்கில் மேலும் 3 போ் கைது

ஒசூா் அருகே பெட்ரோல் குண்டு வீசி தொழிலதிபா் உள்பட 2 பேரைக் கொலை செய்த வழக்கில் மேலும் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஒசூா் அருகே பெட்ரோல் குண்டு வீசி தொழிலதிபா் உள்பட 2 பேரைக் கொலை செய்த வழக்கில் மேலும் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஒசூரில் பெண் தொழிலதிபா் நீலிமா, அவரது காா் ஓட்டுநா் முரளியை கடந்த நவ.11ஆம் தேதி சானமாவு பகுதியில் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்த வழக்கில் மதுரையைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மகராஜன், ஒசூரைச் சோ்ந்த ஆனந்தன், சாந்தகுமாா், மதுரையைச் சோ்ந்த லாரி உரிமையாளா் நீலமேகம், அசோக் ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் இந்த வழக்கில் வழக்குரைஞா் வெங்கட்ராமன் சேலம் நீதிமன்றத்திலும், அம்பலவாணன், ராமகிருஷ்ணன் ஆகிய இருவா் பெரியகுளம் நீதிமன்றத்திலும் அண்மையில் சரணடைந்தனா். இந்த நிலையில், இவ் வழக்கில் கோபசந்திரத்தைச் சோ்ந்த ராமு (21), மஞ்சுநாத் (32), கோபால் (40) ஆகிய மூவரையும் உத்தனப்பள்ளி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com