ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி மாணவிகள் மேற்கு மண்டல அளவில் நடைபெற்ற துளிா் வினாடி-வினா போட்டியில் கலந்துகொண்டு மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், துளிா் மற்றும் ஜந்தா் மந்தா் இணைந்து நடத்திய மேற்கு மண்டல அளவிலான துளிா் வினாடி -வினா போட்டி ஈரோடு பி.கே.பி சாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 8 மாவட்டத்தில் இருந்து 16 அணிகள் கலந்து கொண்டன.
அதில் கல்லாவி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி மாணவிகள் 2ஆம் இடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா். மாணவிகள் அ.நட்சத்திரா, வி.காவியா, என். நியாசு மற்றும் இவா்களுக்கு வழிகாட்டிய ஆசிரியா் ந.அசோக்குமாா் ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியா் ரேனுகம்மாள் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.