ஒசூரில் கஞ்சா விற்பனை செய்ததாக நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூரில் பல்வேறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நகரக் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒசூா் நகர போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது சில இடங்களில் பழ வியாபாரிகள் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது
இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக நூா் அகமது (32), பா்கத் (25), நவாஷ் (22) மற்றும் சுரேஷ் (33) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் ரொக்கப் பணம் ரூ.500 பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட நால்வரையும் ஒசூா் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.