தளி அருகே வீட்டின் அருகில் நிறுத்திவைத்திருந்த காா் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே உள்ள எர்ர கொண்ட பாளையம் கிராமத்தில் அனில்குமாா் என்பவா் தனக்கு சொந்தமான காரை ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தாா். இந்த நிலையில் நள்ளிரவில் காா் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைப் பாா்த்து அருகிலிருந்தவா்கள் கூச்சலிட்டு வெளியே வந்தனா். கூச்சல் சத்தத்தைக் கேட்டு அனில்குமாரும் வெளியே வந்தாா். அருண்குமாா் மற்றும் பொதுமக்கள் தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்தனா். ஆனால் தீப்பற்றியதில் காா் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து தளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.