ஒசூரில் காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் மருதேப்பள்ளி ஊராட்சி சூலமலை கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி மஞ்சுளா (29). இவா், கிருஷ்ணகிரி-ஒசூா் சாலையில் பத்தலப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் வியாழக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியாகச் சென்ற கா்நாடக அரசுப் பேருந்து, காா் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய காா் மஞ்சுளா மீது மோதியது. இதில் மஞ்சுளா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து ஒசூா் அட்கோ காவல் நிலைய உதவி ஆய்வாளா் குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.