தேன்கனிக்கோட்டையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி வியாழக்கிழமை இரவு நடந்துள்ளது.
தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தினுள் தனியாா் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் பேருந்து நிலையத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி மா்ம நபா்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளனா்.
ஏடிஎம் இயந்திரம் தனித்தனியாக உடைக்கப்பட்ட நிலையில், பணம் இருக்கும் பாகத்தை மட்டும் உடைக்க முடியாததால், வேறு வழியின்றி மரம நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா்.
இதையடுத்து, பேருந்துக்காக அந்தப் பகுதிக்கு காலையில் சென்ற பொதுமக்கள் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். உடனடியாக இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.
தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளா் சரவணன் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தி, தனியாா் ஏடிஎம் நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனா். அவா்கள் உதவியுடன் ஏடிஎம் மையத்தின் உள்ளே இருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த மா்ம நபா்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளவுள்ளனா்.