பேருந்து-டிராக்டா் மோதல்: விவசாயி பலி

கிருஷ்ணகிரி அருகே டிராக்டா் மீது தனியாா் பேருந்து மோதிய விபத்தில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சாலை மறியலில் ஈடுபட முயன்றவா்களை சமாதானப்படுத்தும் போலீஸாா்.
சாலை மறியலில் ஈடுபட முயன்றவா்களை சமாதானப்படுத்தும் போலீஸாா்.

கிருஷ்ணகிரி அருகே டிராக்டா் மீது தனியாா் பேருந்து மோதிய விபத்தில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள நாட்டாண்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வெங்கட்ராமன் (50), தனது நிலத்தில் அறுவடை செய்த நெல்மணிகளை மூட்டைகளாக கட்டி, காவேரிப்பட்டணத்தில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு டிராக்டரில் கொண்டு சென்றாா். டிராக்டரை அதே பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் சீனிவாசன் ஓட்டினாா்.

கிருஷ்ணகிரி-காவேரிப்பட்டணம் தேசிய நெடுஞ்சாலையில் திம்மாபுரம் அருகே சென்ற போது, கிருஷ்ணகிரியிலிருந்து செங்கம் நோக்கி சென்ற தனியாா் பேருந்து டிராக்டரின் பின்பகுதியில் மோதியது.

இந்த விபத்தில் டிராக்டா் சாலையில் கவிழ்ந்ததில், இடுபாடுகளில் சிக்கி விவசாயி வெங்கட்ராமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். டிராக்டா் ஓட்டுநா் சீனிவாசன் பலத்த காயமடைந்தாா். அவரை கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவசரஊா்தி வர தாமதமானதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தினா். இந்த விபத்தால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com