ஒசூர் நகர திமுக சார்பில் காமராஜ் நகரில் சனிக்கிழமை தளி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தலைமையில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
திமுக மாவட்டச் செயலாளரும், தளி எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ், நகரச் செயலாளர் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், துணைச் செயலாளர்கள் சீனிவாசன், தனலட்சுமி, சிறுபான்மை பிரிவு மாநில துணைச் செயலாளர் வி.விஜயகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், பொதுக்குழு உறுப்பினர் வீராரெட்டி, மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் பாதியார் அருண்குமார், சையத் பாஷா உள்பட அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர்.