மிட்டப்பள்ளியில் பா.ஜ.க கட்சி கொடியேற்று விழா

கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி காமராஜ் நகர் பகுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு  விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா அண்மையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி காமராஜ் நகர் பகுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு  விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா அண்மையில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சி.நமச்சிவாயம் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் எஸ் .சத்தியமூர்த்தி,  மாவட்ட பிரசார அணி துணைத் தலைவர் எஸ்.ஜெயராமன்,  மாநில பொதுக் குழு உறுப்பினர் ஆர்.சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.நரேந்திரன்,  மாநில இளைஞரணிச் செயலாளர் எம்.நாகராஜ்,  மாவட்ட துணைத் தலைவர் சுதா நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக,  மிட்டப் பள்ளியில் உள்ள முருகன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பிறகு மாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.   இதில் மிட்டப்பள்ளி கிளைச் செயலாளர் சுப்பிரமணி,  பொருளாளர் பெரியசாமி, முனுசாமி, ஒன்றியச் செயலாளர் சிவஞானம்,  நகரப் பொதுச் செயலாளர் மாதவன், வர்த்தகப் பிரிவு மாவட்ட  தலைவர் சிங்காரவேலன்,  இந்து மக்கள் கட்சி ராஜா மற்றும் ஒன்றிய,  நகர, கிளை கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள்  கலந்து
கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com