அதியமான் மகளிர் கல்லூரியில் சிறார் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறார் தொழிலாளர் ஒழிப்பு முறை தின உறுதிமொழி ஏற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறார் தொழிலாளர் ஒழிப்பு முறை தின உறுதிமொழி ஏற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலர் ஷோபா திருமால் முருகன் தலைமை வகித்து குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் உடல் நலம் குறித்தும் பேசினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் கணேசன் சிறார் தொழிலாளர் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளை மாணவிகளிடையே எடுத்துரைத்தார்.
மேலும் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர்கள் மாணவிகள், அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com