கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு நாப்கின் வெண்டிங் மற்றும் எரியூட்டும் கருவி இந்தியன் வங்கி சார்பில் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்தியன் வங்கி, கிருஷ்ணகிரி மண்டலத்தின் சார்பில், காந்தி சாலை கிளை மூலம், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு நாப்கின் வெண்டிங் மற்றும் எரியூட்டும் கருவி, நன்கொடையாக வழங்கும் நிகழ்வு, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தலைமை வகித்தார். இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் திருமாவளவன், முன்னோடி வங்கி மேலாளர் பாஸ்கர், கிளை மேலாளர்கள் செல்வராஜ், சரவணன், நிதிசார் கல்வி ஆலோசகர் பூசாமி, தலைமையாசிரியர் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.