தருமபுரியில் ஜவகர் சிறுவர் மன்றத்தினர் சர்வதேச யோகா தினத்தை அண்மையில் கொண்டாடினர்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில், தருமபுரி அப்பாவு நகரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. மன்றத் தலைவர் தொ.மா.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யோகாவின் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. கலை ஆசிரியர்கள் கி.ஜெயலட்சுமி, வை.இசக்கி, அ.அந்தோணி ராஜா உள்ளிட்டோர் உடற்பயற்சியில் ஈடுபட்டனர்.