பெண்களுக்கு தையல் பயிற்சி: ஜூலை 1-க்குள் விண்ணப்பிக்கலாம்

இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சியில் சேர ஜூலை 1-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சியில் சேர ஜூலை 1-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து அப் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் ராமஜெயம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த பயிற்சி நிறுவனம் மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் மேற்பார்வையின் கீழ் தமிழக அரசின் உதவியுடன், இந்தியன் வங்கி ஊரக வளர்ச்சி அறக்கட்டளையால் தொடங்கப்பட்டு கிருஷ்ணகிரி அணை அருகே செயல்பட்டு வருகிறது. திறன்மிக்க ஆசிரியர்களால் இந்த பயிற்சி
அளிக்கப்படுகிறது. 
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்த பெண்கள் இதில் பங்கேற்று பயன் பெறலாம். சுய உதவிக்குழுக்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சி காலத்தில் மதிய உணவு, தேநீர், பிஸ்கட் ஆகியவை கட்டணமில்லாமல் வழங்கப்படும். 
30 நாள்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 1-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பயிற்சியிலும் 35 பயிற்சியாளர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், கிருஷ்ணகிரி அணை என்ற முகவரியிலோ அல்லது 04343-240500 அல்லது 9442247921 அல்லது 7092225363 அல்லது 7868865346 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com