சாலை விபத்தில் விவசாயி பலி

ஒசூர் அருகே சாலை விபத்தில் விவசாயி  உயிரிழந்தார்.  

ஒசூர் அருகே சாலை விபத்தில் விவசாயி  உயிரிழந்தார்.  
பாகலூர்  அருகே உள்ள தேவிசெட்டிப்பள்ளியைச் சேர்ந்தவர் சத்யநாராயணன் (45).  விவசாயி.  இவர் இரு சக்கர வாகனத்தில் தேவிசெட்டிப்பள்ளி முகுலப்பள்ளி சாலை பெருமாள்பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சத்யநாராயணன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவருடை சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒசூர்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பாகலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com