போச்சம்பள்ளியில் கல்லறைக்காக தனி இடத்தை அரசு ஒதுக்கி தர வேண்டும் என கிறிஸ்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போச்சம்பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்வத மத போதகர்கள் கூட்டத்துக்கு டேவிட் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். டேவிட் மகாராஜான், ஐசக், யோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நோபல் இன்பராஜ் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் போச்சம்பள்ளி தாலுகாவில் வாழும் கிறிஸ்தவர்கள் இறந்தால் அவர்களுக்கு அடக்கம் செய்ய தனியிடம் இல்லை. எனவே, கிறிஸ்தவர்கள் நலன் கருதி தமிழக அரசு அவர்களுக்கு தனி கல்லறைக்கு இடம் ஒதுக்கி தரவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வில்சன் நன்றி கூறினார்.