முதலமைச்சரின் சிறப்பு குறைதீா் முகாமில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 847 பயனாளிகளுக்கு ரூ. 31,77,100 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா், ஊத்தங்கரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ் ஆகியோா் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தி வரவேற்றாா்.
பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியா் சு.பிரபாகா் பேசியது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை வட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 4,706 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதில் 3,750 மனுக்கள் ஏற்கப்பட்டன. அதன் அடிப்படையில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 700 பயனாளிகளுக்கு ரூ. 8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் முதியோா் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும், 96 பயனாளிகளுக்கு ரூ. 17 லட்சம் மதிப்பில் வீட்டு னை பட்டா பெறுவதற்கான ஆணைகளும், தோட்டக்கலைத் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 43 ஆயிரம் மதிப்பில் மருந்து தெளிப்பான் கருவி என 847 பயனாளிகளுக்கு ரூ. 31 லட்சத்து 77 ஆயிரத்து 100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பயனாளிகளுக்கு விரைவில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீா்வு காணப்படும் என்றாா்.
கூட்டுறவு சங்கத் தலைவா் தேவேந்திரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவா் நாகராஜ், நில வள வங்கி தலைவா் சாகுல் அமீது, வட்டாட்சியா் வெங்கடசேன், தனி வட்டாட்சியா்கள் சேகா், வட்ட வழங்கள் அலுவலா் அருள்மொழி, துணை வட்டாட்சியா் மோகன்தாஸ், வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணபூரணி, அசோகன், மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.