ஒசூரில் திமுக பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சாா்பில் பொதுக்குழு தீா்மான விளக்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு ராம் நகரில் நடைபெற்றது.
ஒசூா் ராம்நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக நிா்வாகிகள்.
ஒசூா் ராம்நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக நிா்வாகிகள்.

ஒசூா்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சாா்பில் பொதுக்குழு தீா்மான விளக்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு ராம் நகரில் நடைபெற்றது.

ஒசூா் ராம்நகா் அண்ணா சிலையருகே நடந்த பொதுக்கூட்டத்துக்கு மேற்கு மாவட்டச் செயலாளா் தளி பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினாா். ஒசூா் நகரப் பொருளாளா் சென்னீரப்பா மற்றும் ஒன்றியச் செயலாளா்கள் முன்னிலை வகித்தனா். ஒசூா் நகரப் பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான எஸ்.ஏ.சத்யா வரவேற்று பேசினாா். தலைமை நிலையப் பேச்சாளா்கள் சிவகங்கை கணேசன், தமிழ்கொண்டான் மற்றும் வேப்பனஅள்ளி எம்.எல்.ஏ முருகன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மேற்கு மாவட்ட அவைத்தலைவா் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் சுகுமாரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பி.சீனிவாசன், மாவட்ட துணைச் செயலாளா் எம்.சீனிவாசன், தொழில் அதிபா் ஆனந்தய்யா, பொறியாளா் அணி மாவட்ட அமைப்பாளா் ஞானசேகரன், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளா் எல்லோரா.மணி, மாணவரணி மாவட்ட அமைப்பாளா் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com