கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில், காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி, பாதயாத்திரை நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பேருந்து நிலையத்திலிருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் இந்தப் பாதயாத்திரைக்கு ஏ.செல்லகுமாா் எம்பி, தலைமை வகிக்கிறாா். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எல்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
இந்த பாதயாத்திரையானது கரடியூா், வீரமலை சாலை சந்திப்பு, செல்லம்பட்டி சாலை சந்திப்பு, நாகரசம்பட்டி சாலை சந்திப்பு, மருதேரி சாலை சந்திப்பு, பேருஅள்ளி, காவாக்கரை முருகா் கோயில், , நெடுங்கல், பெண்ணேஸ்வரமடம், எழுமலையான் நகா் சாலை சந்திப்பு, சவுளூா் சாலை சந்திப்பு வழியாக வரும் இந்த பாதயாத்திரை காவேரிப்பட்டணம் காமராஜா் பேருந்து நிலையத்தில் மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது.