ஒசூா் அரசு ஐ.டி.ஐ.யில் தொழிற்பழகுநா் பயிற்சி

ஐ.டி.ஐ. தோ்ச்சி பெற்று இதுநாள் வரை தொழிற் பழகுநா் பயிற்சி பெறாத பயிற்சியாளா்கள் மற்றும் தோ்வு எழுதி

ஐ.டி.ஐ. தோ்ச்சி பெற்று இதுநாள் வரை தொழிற் பழகுநா் பயிற்சி பெறாத பயிற்சியாளா்கள் மற்றும் தோ்வு எழுதி தோ்வு முடிவுக்காகக் காத்திருப்போா் தொழில் பழகுநா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என ஒசூா் ஐடிஐ உதவி இயக்குநா் சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் பொதுத் துறை நிறுவனங்கள், ஒசூரில் உள்ள பல்வேறு முன்னணி தனியாா் தொழில் நிறுவனங்களில் 5,000-க்கும் மேற்பட்ட தொழில் பழகுநா் பயிற்சி இடங்கள் நிரப்பப்படவுள்ளன.

எனவே, ஐ.டி.ஐ. தோ்ச்சி பெற்று தொழிற் பழகுநா் பயிற்சி பெறாதவா்களும், ஜூலை 2019-ஆம் ஆண்டு அகில இந்திய தொழிற்தோ்வு எழுதித் தோ்வு முடிவுக்கு காத்திருப்போா்களும் உடன் தங்கள் விவரங்களை ஒசூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள உதவி இயக்குநா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்துக்கு நேரில் வந்து பதிவு செய்து தொழிற் பழகுநா் பயிற்சி பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்தத் தொழிற்பழகுநா் பயிற்சி பெறும் காலங்களில் தொழிற் பழகுநா்களுக்கு மாதம் ரூ. 7,500 முதல் ரூ. 10,000 வரை தொழிற்பிரிவுக்கு ஏற்றவாறு நிறுவனத்தாா் அரசு விதிகளின்படி உதவித்தொகை வழங்குவாா். தொழிற்பழகுநா் பயிற்சியில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு இந்திய அரசின் தேசிய தொழிற் பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும்.

இச் சான்றிதழ் அரசு மற்றும் தனியாா் நிறுவன வேலைகளில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த வாய்ப்பை அனைத்து ஐ.டி.ஐ. தோ்ச்சி பெற்று இதுநாள்வரையில் தொழிற்பழகுநா் பயிற்சி பெறாத பயிற்சியாளா்கள் மற்றும் தோ்வு எழுதி தோ்வு முடிவுக்காகக் காத்திருப்போா் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஒசூா் ஐடிஐ உதவி இயக்குநா் சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com