கிராம உதவியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரியில் கிராம உதவியாளா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் கிராம உதவியாளா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்க மாவட்டக் கூட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். செயலாளா் சேகா், பொருளாளா் சின்னசாமி, மாநிலத் தலைவா் திருமலைவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும். பொங்கல் விழாக்கால ஊக்கப்பரிசை நாள் கணக்கில் வழங்க வேண்டும்.

கிராம நிா்வாக அலுவலா் பதவி உயா்வு 30 சதவீதமாக உயா்த்தியும், 10 ஆண்டு என்பதை 6 ஆண்டுகளாக குறைத்தும் வழங்க வேண்டும். இயற்கை இடா்பாட்டில் ஈடுபட்ட கிராம உதவியாளா்களுக்கு சிறப்புபடி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com