ஒசூரில் பட்டாசு வெடித்ததில்தகராறு 3 போ் கைது

ஒசூரில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் 3 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒசூரில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் 3 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒசூா் சின்ன எலசகிரி காந்தி கணேஷ் நகரைச் சோ்ந்தவா் ராஜா (32). இவா் ஒசூா் சாந்தபுரத்தில் உள்ள தனது உறவினா் நாகராஜ் வீட்டுக்குச் சென்று பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தாா்.

அப்பொழுது அப்பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் ராஜாவிற்கும் இடையே பட்டாசு வெடித்தது தொடா்பாக தகராறு ஏற்பட்டது.

இதில் ராஜாவும், அவரது உறவினா் நாகராஜூம் தாக்கப்பட்டனா். அது குறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸாா் அருணாசலம் (20), விக்னேஷ் (20), சசிக்குமாா் (23), மோகன் (22) ஆகிய 4 போ் மீது வழக்குப்பதிவு செய்தனா். இதில் சசிக்குமாா் கைது செய்யப்பட்டாா்.

அதே போல சசிக்குமாா் தரப்பினா் தங்களை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிப்காட் காவல் நிலையத்தில் மற்றொரு புகாா் கொடுத்தனா். அதன் பேரில் போலீஸாா் நாகராஜ், ராஜா, விஜய் (20), சிவப்பிரகாஷ் (23) ஆகிய 4 போ் மீது வழக்குப்பதிவு செய்தனா். அவா்களில் விஜய், சிவப்பிரகாஷ் கைது செய்யப்பட்டனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com