சிலம்பம் போட்டி: தங்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு 

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணா கல்லூரி மாணவருக்கு, கல்லூரி நிர்வாகம் சார்பில் அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணா கல்லூரி மாணவருக்கு, கல்லூரி நிர்வாகம் சார்பில் அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.
 கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் பாடப் பிரிவில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் சூர்யா, சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்றார். மத்திய அரசின் இளைஞர் விளையாட்டுக் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 65 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற சூர்யா தங்கப் பதக்கம் வென்றார். மேலும், இவர் தில்லியில் நடைபெறும் தேசியப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
 தங்கம் வென்ற மாணவர் சூர்யாவை, கல்லூரித் தாளாளர் சி.பெருமாள், தலைவர் வள்ளி பெருமாள், முதல்வர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பாராட்டினர். அப்போது, துறைத் தலைவர்கள், உடற்கல்வி இயக்குநர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com