ஒசூர் கிளைச் சிறையில்  ஏடிஜிபி ஆய்வு

ஒசூர் கிளைச் சிறையில் ஏடிஜிபி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

ஒசூர் கிளைச் சிறையில் ஏடிஜிபி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கிளைச் சிறையில்,  கூடுதல் காவல் துறை இயக்குநர் மற்றும் சிறைத் துறை தலைவர் ஆபாஷ்குமார் திடீரென ஆய்வு மேற்கொண்டார். கிளை சிறைச்சாலையில் சுகாதார பராமரிப்பு மற்றும் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து அவர் நேரில் ஆய்வு செய்தார்.
மேலும் சிறைத் துறையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். அப்போது, ஏடிஎஸ்பி சக்திவேல் உடனிருந்தார். பின்னர்,  ஆபாஷ்குமார் ஒசூரிலிருந்து வேலூருக்கு புறப்பட்டு சென்றார். 
முன்னதாக, கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து ஒசூர் வந்த ஆபாஷ்குமாரை சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன், ஒசூர் டிஎஸ்பி மீனாட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com