வனப் பகுதியில் வேட்டையாட முயன்றவர் கைது

அய்யூர் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்றவரை வனத் துறையினர் கைது செய்தனர்.

அய்யூர் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்றவரை வனத் துறையினர் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேன்கனிக்கோட்டை வனச்சரகரை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 
அதன் பேரில், வனசரகர் சுகுமார், வனவர் கதிரவன் மற்றும் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கூச்சுவாடி வனப்பகுதியில் உள்ள ஜோடு குட்டை பொம்மனஅள்ளி மாரியம்மன் கோயில் பகுதியில் கன்னி வலைகளுடன் வன விலங்குகளை வேட்டையாடி கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் சித்தலிங்க கொட்டாயை சேர்ந்த மாரப்பா (35) என்பது தெரிய வந்தது. அவரை வனத்துறையினர் கைது செய்து மாவட்ட வன அலுவலகத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com