கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டத்தில் நடைபெறும் ஆதார் அட்டைக்கான சிறப்பு முகாமில் திருத்தும் பணி நடைபெறுகிறது.
இதுகுறித்து, அஞ்சல் கோட்ட நிர்வாகம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:அனைவருக்கும் ஆதார் அட்டை பெறும் வகையிலும், ஆதார் அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில், கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
செப்.25 முதல் 28-ஆம் தேதி வரையில், எலத்தகிரி, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, கெலமங்கலம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. புதிய அட்டைக்கான பதிவுக்குக் கட்டணம் ஏதுமில்லை. ஆதார் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். செல்லிடப்பேசி எண், இணையதள முகவரி ஆகியவற்றை பதியவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் ஆவணங்கள் தேவையில்லை. ஆனால், பிற திருத்தங்கள் செய்ய உரிய ஆவணங்கள் தேவை. மேலும், விவரங்களுக்கு, அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களை அணுகலாம். அஞ்சல் துறையின் ஆதார் சேவையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.