சிங்கப்பூரில் இறந்த மகனின் உடலை மீட்டு தர அரசுக்கு பெற்றோர் கோரிக்கை

சிங்கப்பூரில் விபத்தில் உயிரிழந்த தங்களது  மகனின் சடலத்தை மீட்டு தரக் கோரி அவரது பெற்றோர், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கப்பூரில் விபத்தில் உயிரிழந்த தங்களது  மகனின் சடலத்தை மீட்டு தரக் கோரி அவரது பெற்றோர், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பென்னாகரம் அருகேயுள்ள மோட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த  பூபாலன் மகன் சத்யராஜ் (24).  சிங்கப்பூரில்  தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.  இந்த நிலையில் சத்யராஜ் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக  அவரது பெற்றோருக்கு நண்பர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து தங்களது மகனின் உடலை மீட்டுத் தர வேண்டும் என தமிழக அரசுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com