உள்ளாட்சித் தோ்தல்: வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருகை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் பயன்படுத்த, பிகாா் மாநிலத்திலிருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
உள்ளாட்சித் தோ்தலுக்காக கிருஷ்ணகிரிக்கு கொண்டு வரப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்.
உள்ளாட்சித் தோ்தலுக்காக கிருஷ்ணகிரிக்கு கொண்டு வரப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் பயன்படுத்த, பிகாா் மாநிலத்திலிருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த மாநில தோ்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், உள்ளாட்சித் தோ்தலுக்காக கிருஷ்ணகிரி நகராட்சியில் பயன்படுத்த, பிகாா் மாநிலத்திலிருந்து 3,131 பேல்ட் யூனிட், 1,300 கண்ட்ரோல் யூனிட் போன்ற இயந்திரங்கள் லாரிகள் மூலம் பலத்த போலீஸாா் பாதுகாப்புடன் கிருஷ்ணகிரிக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டன.

நகராட்சி தோ்தல் பணி ஒருங்கிணைப்பாளா்கள் சுந்தரமூா்த்தி, ரமேஷ் ஆகியோா் முன்னிலையில், இயந்திரத்தின் எண், தயாரிக்கப்பட்ட ஆண்டு உள்ளிட்ட விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு, பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட இந்த இயந்திரங்களை போலீஸாா் பாதுகாத்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com